இஸ்ரேலின் தென் பகுதியை பதம் பார்த்த ஈரான் ஏவுகணை!
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தென் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்ததால், ஆரத் Arad நகரை ஏவுகணைத் தாக்கியுள்ளது.
இதில் சுமார் 88 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள டிமோனா Dimona நகரிலும் மேற்படி தாக்குதலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை, ஈரானில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள்மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன தாக்குதல் நடத்தியுள்ளது.





