ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடையவர்கள் 16 பேர் குவைட்டில் அதிரடியாக கைது – லெபனான் கண்டனம்
குவைட்டை இலக்காகக் கொண்ட ஹெஸ்புல்லாவின் சதித்திட்டம் எனக் கூறப்படுவதை லெபனான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஹெஸ்புல்லாவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 குவைட் குடிமக்கள் மற்றும் 02 லெபனான் நாட்டினர்கள் உட்பட 16 பேரை கைது செய்துள்ளதாக குவைட் உள்துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, லெபனான் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் திட்டமிட்டிருந்ததாக குவைட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், கேமரா ட்ரோன்கள் மற்றும் மோர்ஸ் குறியீடு தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.





