பள்ளி வாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞனால் யாழில் பரபரப்பு!
யாழிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றிரவு தொழுகை இடம்பெறும்போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை இடம்பெற்றது.
இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்குள்ள மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, வாள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்வேளையில் வாளினை கொண்டுவந்த குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.





