லண்டனில் சிக்கித் தவிக்கும் லண்டன் குடும்பம் – அரசு கைவிட்டது ஏன்?
பிரித்தானிய குடும்பமொன்று மத்திய கிழக்கில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓமானில் இருந்து லண்டனுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வெளியேற்ற விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
லண்டனைச் சேர்ந்த 26 வயதான நுசைபா சத்தார், தனது குடும்பத்துடன் டுபாயில் இருந்தபோது, ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதால் பிரித்தானியாவுக்கு திரும்ப தீர்மானித்துள்ளனர்.
விசா தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில், உதவி இல்லாமல் மத்திய கிழக்கில் சிக்கித் தவிப்பதாக அந்த குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது.




