அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளை அழிக்க கூடியது – ராகுல் காந்தி
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளை அழிக்க கூடியது என என இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்
பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் நடைபெற்ற மஸ்தூர் கிசான் மகா பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்க ஒப்பந்தம், விவசாயத் துறை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்கு மாதங்களாக முடங்கி கிடந்த நிலையில்
தற்போது பிரதமர் ஏன் 15 நிமிடங்களில் செய்தார் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் 9 இலட்சம் கோடி ரூபா மதிப்பிலான அமெரிக்க பொருட்களை இந்தியா கொள்வனவு செய்யும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்புக்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.




