அச்சுவேலியில் 9 மாடுகளை கடத்தியவர் கைது!
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரவாணி பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஒன்பது மாடுகளைக் கடத்திச் சென்ற ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அப்பகுதியில் நீண்டகாலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இன்று சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்றபோது, காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் குற்றத் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மீட்கப்பட்ட மாடுகளுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





