உக்ரைனின் கத்தோலிக்கர்களைக் கௌரவிக்கும் அஞ்சல் தலையை வெளியிட்ட வத்திக்கான்!
உக்ரைனின் கத்தோலிக்கர்களைக் கௌரவிக்கும் வகையில் வத்திக்கான் ஒரு புதிய தபால் தலையை வெளியிட்டுள்ளது.
போர்க்காலத்தில் உக்ரேனியர்களின் அன்றாட போராட்டங்களைக் குறிப்பிடும் வகையிலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் கதீட்ரல் ஆலயத்தின் பிரகாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க விடுமுறை நாட்களைக் குறிக்க அல்லது தேசிய தேவாலயங்களை கௌரவிக்க வத்திக்கான் தபால் சேவை அடிக்கடி முத்திரைகளை வெளியிடுகிறது,
உள்ளூர் புனிதர்கள் போன்ற மதப் பிரமுகர்களின் சித்தரிப்புகள் இதில் இடம்பெறும். ஆனால் இம்முறை உக்ரைன் போரை வெளிப்படுத்தியுள்ளது.





