இலங்கை செய்தி

“புலிகளை தோற்கடிக்க பங்களிப்பு வழங்கியவரே சுரேஷ் சலே”

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி கூறிய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila தெரிவித்தார்.

“புலிகளை தோற்கடிப்பதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய படைவீரர்தான் சுரேஷ் சலே.

எனவே, அவரை பழிவாங்க வேண்டும் என்ற தேவைப்பாடு பிரிவினைவாத சக்திகளுக்கு இருந்தது. சனல் 04 ஊடகத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அரசாங்கம் கைது செய்ய இருந்தது.

எனினும், ரணில் விக்கிரமசிங்க நியமித்த இமாம் குழுவின் அறிக்கையை என்.பி.பி. NPP ஆட்சிகாலத்தில் நான் வெளியிட்டதால் அந்த கைது இடம்பெறவில்லை.” எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நான்கு வருடங்களாகின்றன. எனவே, அடுத்த மாதம் இது பற்றி பேசப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் பிள்ளையானை கைது செய்தனர். இம்முறை சுரேஸ் சலேவை கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் மாதமே இக்கைது இடம்பெற்றிருக்கும். எனினும், நிலக்கரி மோசடியை திசை திருப்புவதற்காகவே அது முன்கூட்டியே நடந்துள்ளது.

அரசாங்கம் கூறியதுபோல பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நாம் முன்னிலையாவோம்.” – என கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!