கருத்து & பகுப்பாய்வு

ஒரு கிராம் தங்கம் 1 இலட்சம் ரூபா – அதிரும் தங்க விலை கணிப்பு

உலகளாவிய பொருளாதார நிலை மாற்றங்களால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

இந்தியாவின் தங்கமயில் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ் சமீபத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 23,000 முதல் 25,000 அமெரிக்க டொலர் வரை செல்ல வாய்ப்பு இருக்கலாம் என தெரிவித்தார்.

ஆனால் பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் இதனை உடனடி நிகழ்வாகக் கருதக் கூடாது என்றும், அதிகரிப்பு நீண்டகால பணவீக்கம், நாணய மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலைமைகள் மூலம் மட்டுமே நிகழும் என்றும் கூறினார்.

தங்க விலை உயர்வு பயணம்

2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1,000 டொலர் விலையாக காணப்பட்டது. அப்போதைய நிலைமையிலிருந்து 5,000 டொலர் வரை உயர்வில் சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் பிடித்தது.

இதன் மூலம் 1,000 டொலரிலிருந்து 5,000 டொலர் வரை நான்கு மடங்கு உயர்வு ஏற்பட்டது. தற்போது 5,000 டொலர் விலையிலிருந்து 25,000 டொலர் வரையாவது உயர்வை அடைய, இது 2025 முதல் 2035 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டுமே சாத்தியம் என நிபுணர் கூறுகிறார்.

தற்போதைய நிலை

தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 5,000 டொலர் விலைக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. 30 கிராம் அடிப்படையில், ஒரு கிராம் தங்கம் சுமார் 800 டொலர், இந்திய ரூபாவில் சுமார் ₹70,000 க்கு சமம். இந்த நிலையில் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில், டொலர் மதிப்பு அதிகரித்தால் ஒரு கிராம் தங்கம் ₹1 லட்சம் கடக்க வாய்ப்பு உள்ளது.

குறுகியகாலம் vs நீண்டகாலம்

“தங்கம் குறுகியகால இலாபம் தரும் முதலீடு அல்ல, உலகளாவிய பணவீக்கம், அதிக பண அச்சு, நாணய மதிப்பில் சீரற்ற நிலை போன்ற காரணிகள் நீண்டகால உயர்வுக்கு முக்கிய காரணிகள்.

25,000 டொலர் இலக்கு உடனடியாக நிகழாது. அது அடுத்த 10–12 ஆண்டுகளில் மட்டுமே சாத்தியம்” என ஆனந்த் ஸ்ரீனிவாசன் வலியுறுத்துகிறார்

முதலீட்டாளர்களுக்கான அறிவுரை

தங்கத்தில் முதலீடு செய்யும் போது நீண்டகால திட்டம் அவசியம். குறுகியகால விலை மாற்றங்களுக்குப் பதிலாக, அடுத்த ஒரு தசாப்தத்தில் நிலையான உயர்வை எதிர்பார்க்க வேண்டும். இது முதலீட்டாளர்களை சந்தை ஆற்றல் மற்றும் பணவீக்கம் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கும் உதவும்.

ஒரு கிராம் தங்கம் 1 இலட்சம் இந்திய ரூபா எனும் தலைப்பு விசித்திரமானது, ஆனால் தற்போதைய கணிப்புகள் அடிப்படையில், இது உடனடியாக நிகழவில்லை.

நிபுணர்கள் வலியுறுத்தும் படி, தங்கத்தில் முதலீடு செய்யும் போது குறுகியகால இலாபம் தவிர நீண்டகால பாதுகாப்பான சொத்து என்று கருதி, 10–12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் உயர்வை எதிர்பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.

Sainth

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை
error: Content is protected !!