மொஸ்கோவில் 04 விமான நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தம்!
மொஸ்கோவில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து நான்கு விமான நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோவிற்கு செல்லும் வழியில் குறைந்தது ஏழு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெற்கு ஒடேசா (Odesa) பிராந்தியத்தில் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா தொடர் தாக்குதல்களை முன்னெடுத்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
ரஷ்யா இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது – உக்ரைன் ஆதங்கம்




