ரஷ்யா இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது – உக்ரைன் ஆதங்கம்

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில ஒருவர் உயிரிழந்துள்ளார். கியேவ் (Kyiv), ஒடேசா (Odesa) மற்றும் கார்கிவ் (Kharkiv) பகுதிகளில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோ ஒரே இரவில் 50 பொலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஏவியுள்ளது. அத்துடன் 297 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.