காசாவில் போரால் மாண்டவர்களின் எண்ணிக்கை மதிப்பிட்டதை விட அதிகம்!
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போரால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை முன்பு மதிப்பிட்டதை விட அதிகமாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்ட சுயாதீன ஆய்வில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 75,000 க்கும் மேற்பட்ட “வன்முறை மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா சுகாதார அமைச்சகத்தின் (MoH) நிர்வாக பதிவுகள் ஒரு அதிகப்படியான எண்ணிக்கையை விட ஒரு பழமைவாத “தளத்தை” பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி நிலவரப்படி, போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 71,662 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் மதிப்பிடுகிறது.
அவர்களில், 488 பேர் காசாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஒரு கூற்றையே இஸ்ரேலும் முன்வைத்துள்ளது. ஆனால் பாலஸ்தீனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் அதிகளவிலான மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தைகள் உள்பட ஏறக்குறைய 56 சதவீதமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





