09 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலுக்கு பயணமாகும் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த முயற்சிக்கும் நிலையில் இந்த பயணத்தை மோடி மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணத்திற்கான சரியான திகதிகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பிப்ரவரி 27-28 ஆம் திகதிகளில் இந்த பயணம் முன்னெடுக்கப்படலாம் என ஊகிக்கப்படுகிறது.
மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மோடி தனது இஸ்ரேலிய சகாவான பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும், மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலைமை உட்பட பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களையும் விவாதிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் உறவுகளை சீராக மேம்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





