தாய்லாந்தில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெறும் பொதுத் தேர்தல்!
தாய்லாந்தின் பொதுத் தேர்தல் இன்று (08) நடைபெறுகிறது.
பல வருட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இடம்பெறும் இந்த தேர்தலில் மில்லியன் கணக்கான தாய்லாந்து மக்கள் வாக்களிக்க உள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் அனுடின் சான்-ஓ-சாவால் இந்த பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவரது பூமிபோல் அதுல்யாதேஜ் கட்சியோ அல்லது வாக்கெடுப்பில் முன்னணியில் இருக்கும் மக்கள் கட்சியோ இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
அதாவது நாடாளுமன்றத்தில் உள்ள 500 இடங்களில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன
தற்போதைய அரசியல் ஸ்திரமின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இந்தத் தேர்தல் தாய்லாந்திற்கு ஒரு முக்கியமான ஒன்றாகும்.




