தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்து கௌரவித்த பார்த்திபன்!
தூய்மை பணியாளருக்கு பாதணி அணிவித்து பாத பூஜை செய்து கௌரவப்படுத்தியுள்ளார் நடிகர் பார்த்திபன் Parthiban.
குப்பையில் கிடந்த 45 பவுண் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த அவரின் செயலை பாராட்டியே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா, குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் சேர்ப்பித்துள்ளார்.
அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.” ஏன்று குறிப்பிடப்பட்டுள்ளது.





