மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
மகாராஷ்டிர Maharashtra, மாநிலத்தின் துணை முதல்வர் மறைந்த அஜித் பவாரின் பாரியாரான சுனேத்ரா பவார் Sunetra Pawar , தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.
மகாராஷ்டிர மாநில அரசியல் வரலாற்றில் பெண்ணொருவர், துணை முதல்வர் பதவிக்கு வருவது இதுவே முதன்முறையாகும்.
லோக் பவனில் சிறிய அளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. சுனேத்ரா பவாருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் திகதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, மகாராஷ்டிர அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டார்.





