செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில்(Indore) நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அந்தவகையில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல்(Daryl Mitchell) 137 ஓட்டங்களும் கிளென் பிலிப்ஸ்(Glenn Phillips) 106 ஓட்டங்களும் பெற்றனர்.

338 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 296 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இந்திய அணி சார்பில் அணிக்காக தனி ஆளாக போராடிய விராட் கோலி(Virat Kohli) 124 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

மேலும், நிதிஷ் குமார் ரெட்டி(Nitish Kumar Reddy) 53 ஓட்டங்களும் ஹர்ஷித் ராணா(Harshit Rana) 52 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.

இறுதியில், இந்திய அணியை 41 ஓட்டங்களால் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், ஒருநாள் தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் இறுதி போட்டியின் நாயகன் விருதையும் டேரில் மிட்செல்(Daryl Mitchell) கைப்பற்றினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!