ஐரோப்பா

புத்தாண்டு தினத்தில் பணிப்புறக்கணிப்பில் இறங்கும் பிரித்தானிய தொழிலாளர்கள்!

பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பாதுகாப்பை வழங்கும் சுமார் 300 பொது காவலர்கள்,  (PCS) தொழிற்சங்க உறுப்பினர்கள், இந்த ஆண்டு நான்காவது முறையாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறக்கவுள்ள புத்தாண்டு தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பெரும் சவால்களை கொண்டுள்ளது. அதில் பிரதானமானது ஊழியர்களின் ஊதிய உயர்வு. நாளைய தினம் பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

PCS பொதுச் செயலாளர் ஃபிரான் ஹீத்கோட், வேலைநாட்கள் குறைக்கப்பட்டமை மற்றும் குறைந்த ஊதியம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தொழிற்கட்சி அரசாங்கம் தொழில்துறை உறவுகளை சரிசெய்ய முயற்சித்த போதிலும், வர இருக்கும் வேலைநிறுத்தங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

“2026 ஆம் ஆண்டில் இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க வேண்டுமானால், அவுட்சோர்சிங் (outsourcing) ஒப்பந்தங்களை மேற்பார்வையிடும் டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (Transport for London), தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!