உலகம்

80 ஆண்டுகளுக்குப் பிறகு செர்பியா தலைநகரில் அகற்றப்பட்ட 470 கிலோ எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு

செர்பியாவின்(Serbia) தலைநகரான பெல்கிரேடின்(Belgrade) மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்திலிருந்து 470 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப் போரின் வான்வழி குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக அதகிரிகள் தெரிவித்துள்ளனர்.

1944ம் ஆண்டு நாஜி(Nazi) ஆக்கிரமிப்பிலிருந்து பெல்கிரேடை விடுவித்தபோது, ​​ஜெர்மனியின்(Germany) நிலைகள் மீதான நேச நாட்டு விமானத் தாக்குதல்களின் போது அமெரிக்காவில்(America) தயாரிக்கப்பட்ட AN-M44 குண்டு பயன்படுத்தப்பட்டது.

ஒரு குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு வர்த்தக வளாகம்(shopping mall) அருகே குண்டு காணப்பட்டதால் தீவிர கண்காணிப்புக்கு பிறகே குண்டு அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெல்கிரேடில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள ஒரு இராணுவ ஆயுதப் பயிற்சி மைதானத்திற்கு குண்டு கொண்டு செல்லப்பட்டது, அங்கு அது வரும் நாட்களில் அழிக்கப்படும்.

சமீபத்திய ஆண்டுகளில் செர்பியாவில் கடந்த காலப் போர்களைச் சேர்ந்த பல வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை அனைத்தும் வெடிக்காமல் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

செப்டம்பர் 2024ல், பெல்கிரேடில் உள்ள செர்பிய நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டுமான இடத்திலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோகிராம் எடையுள்ள ஒரு நூற்றாண்டு பழமையான பீரங்கி குண்டு அகற்றப்பட்டது.

KP

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்