கொழும்புக்கு நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமது ஊர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள திரும்புவதற்காக நாளை (28) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி, கொழும்புக்கு செல்லும் மக்களுக்காக மேலதிக நீண்ட தூர சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக
இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பல மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு செல்லும் மக்களுக்காக பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை எக்ஸ்பிரஸ் தொடருந்து நாளை (28) இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுதினம் (29) அதிகாலை 05 மணிக்கு மாத்தறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு விசேட ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே
திணைக்களம் தெரிவித்துள்ளது.





