இலங்கை செய்தி

தெற்கு கடற்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு: ஐவர் கைது!

இலங்கையின் தெற்கு பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் இருந்து பெருந்தொகையான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் சந்தை பெறுமதி 200 கோடி ரூபாவரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடி படகொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த படகு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவேளை, போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. படகில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கப்பல் இன்று காலை திக்ஹோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.

11 பொதிகளில் இருந்தே ஐஸ் மற்றும் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.

169 கிலோ ஐஸ் போதைப்பொருளும், 21 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயினும் பொதிகளுக்குள் இருந்துள்ளன என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றிருந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருளை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்களால் வழங்கப்படும் தகவலின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!