இலங்கைக்கு நன்கொடை மற்றும் நிவாரண உதவியை அறிவித்த சீனா
இலங்கையில் இடம்பெற்றுவரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக சீன(China) அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், 10 மில்லியன் ரிங்கிட் பெறுமதியான நிவாரணப் பொருட்களும் இலங்கைக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சீன மக்கள் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை உறுதிமொழி மீண்டும் உறுதிப்படுத்துவதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.





