இஸ்ரேலில் பணிப்புரிந்து வந்த மற்றுமொரு இலங்கையர் உயிரிழப்பு!
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதய நோய் காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குருநாகல் கல்கட்டுயாய பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கடந்த 14 ஆம் திகதி, சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரால் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





