இந்தியா

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் கர்நாடக மாநிலம்!

கர்நாடகா, முறையான வேலைகளில் உள்ள அனைத்து பணிபுரியும் பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கையின் கீழ், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 18 முதல் 52 வயது வரையிலான பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விடுப்பு பெற மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்பதும் விசேட அம்சமாகும்.

பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கின்றன, அதே நேரத்தில் கேரளா பல்கலைக்கழக மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவன ஊழியர்களுக்கு அதை வழங்குகிறது.

இதேவேளை ஸ்பெயின், ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த கொள்ளை நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே