இலங்கை

50 ஆயிரம் பேருடன் களமிறங்குவோம் – எதிரணிகளுக்கு ஜே.வி.பி சவால்

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில், அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம்வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“ ஆட்சியைக் கவிழ்ப்பது பற்றியும், கொழும்பை சுற்றிவளைப்பது குறித்தும் தற்போது கதைக்கின்றனர். அவர்களின் நகர்வுகள் எமக்கு சவால் அல்ல.
எப்படி போராட்டம் நடத்த வேண்டும், எப்படி பேரணி நடத்த வேண்டும் என செய்து காட்டியவர்கள் நாம். எனவே, 3000 ,4000 பேரை திரட்டி எம்மை மிரட்ட முடியாது.

பேரணி பார்க்க வேண்டுமானால் நாமும் நடத்தி காட்டுகின்றோம். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமென்றால் பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கும் வல்லமை எமது அரசியல் அணிக்கு உள்ளது. எனவே, எம்முடன் விளையாட வரவேண்டாம்.” எனவும் ஜே.வி.பி. செயலாளர் குறிப்பிட்டார்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!