இலங்கை

மீண்டும் பலமடைந்து வரும் மொட்டுக் கட்சி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிச்சென்ற ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் கட்சி வலுவடைந்துவருகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியானது 3 சதவீதமாகவே இருந்தது. எனினும், அது 69 லட்சமாக அதிகரித்தது. அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குரிய 66 லட்சம் வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு சென்றடைந்தது.

ஆனால் தற்போது ஆதரவாளர்கள் கட்சியை நோக்கி வருகின்றனர். கிராமிய மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பலமடைந்துவருகின்றது.” எனவும் அவர் கூறினார்.

அதேவேளை , 2029 ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தற்போதே ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பை கட்சி விடுக்காது எனவும் ன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டார்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்