இலங்கை செய்தி

முக அடையாளத்திற்காக விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இஷாரா செவ்வந்தி

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இஷாரா உட்பட 6 பேர் கொண்ட குழு கடந்த 13ம் திகதி நேபாளத்தில் விசேட சுற்றிவளைப்பின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி அவரும் அவரது குழுவினரும் இன்று (15) மாலை 6.52 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானம் மூலம் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இஷாரா செவ்வந்தி பிரதான சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியின் முகத்தை அடையாளம் காண விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதில் அவரது முகம் 100% உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

(காணொளி பதிவு மூலம் செய்தியை பார்வையிட)

https://web.facebook.com/reel/705029195945989

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!