சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு

சூடானின் வடக்கு டார்பர் (Darfur) மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மீது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய ஷெல் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
எல்-ஃபாஷர் மருத்துவமனை மீதான தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒரு பெண் மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் உள்ளதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் முழுமையான போர்க்குற்றம் என்றும், ஊழியர்களை பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை முழுமையாக புறக்கணிப்பதை இது காட்டுகிறது என்றும் சூடான் மருத்துவக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிடம் சுகாதார வசதிகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தவும், முற்றுகையிடப்பட்ட நகரத்தில் பேரழிவிற்குள்ளான சுகாதார அமைப்பைப் பாதுகாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த மருத்துவமனை நகரத்தில் கடைசியாக செயல்படும் சுகாதார வசதிகளில் ஒன்றாகும்.