பொழுதுபோக்கு

நிரந்தரமாக பிரியும் ஜி. வி.பிரகாஷ் – சைந்தவி..! வழங்கப்பட்டது தீர்ப்பு

இசையமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார், சைந்தவிக்கு பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது பள்ளி தோழியான சைந்தவியை 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

12 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் குடும்ப பிரச்சனையால் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இசையப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடா்பாக இருவரும் சேர்ந்து முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியது. 6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகினர். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்