சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தம்

சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் முதல் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை விமானங்கள் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல், புறப்படும் அனைத்து விமானங்களும் முந்தைய விமானத்திற்குப் பிறகு குறைந்தது நான்கு நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
இது விமானங்களின் எண்ணிக்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகள் தங்கள் விமானத்தின் நிலையைச் சரிபார்க்க நேரடியாக தொடர்புடைய விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சிட்னி விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
(Visited 2 times, 2 visits today)