மெல்பர்னில் காயமடைந்த கங்காருவுக்கு உதவும் முயற்சியில் இரு பெண்கள் விபத்தில் சிக்கி பலி

வாகனம் மோதி காயமடைந்த கங்காருவுக்கு உதவ முயற்சி செய்த இரண்டு பெண்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
செம்பம்பர் 4ஆம் தேதி மெல்பர்னின் புறநகர்ப் பகுதியான கிரேய்கிபர்னில் உள்ள ஹுயும் நெடுஞ்சாலையில் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். மாலை ஏழு மணியளவில் வழியில் வாகனம் மோதி காயமடைந்த கங்காருவை அவர்கள் கண்டனர். இருவரும் காரை நிறுத்திவிட்டு அதற்கு உதவ முயன்றனர்.
ஆனால் அச்சமயத்தில் வேகமாக வந்த மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர், கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டார். அதன் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக அவர் வாகனத்தை வேகமாகத் திருப்பியபோது பெண்கள் மீது மோதிவிட்டது.
முப்பது வயதுகளில் இருந்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரங்களில் இறந்தார்.
இருவரின் அடையாளம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. ஓட்டுநர் விசாரைணைக்கு ஒத்துழைத்து வருவதாக விக்டோரியா காவல்துறை உதவி ஆணையரான கிளென் வியர் கூறினார்.