அழகுசாதனப் பொருட்களால் ஆபத்து – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில், அதிக அளவுகளில் கன உலோகங்கள் உள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
அவற்றில், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மிக முக்கியமானவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
(Visited 4 times, 4 visits today)