இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்துவேன் – டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை மேலும் உயர்த்த உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத % வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய டிரம்ப், அந்த வரியை மேலும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கி, அதை சந்தையில் விற்று பெரும் இலாபம் ஈட்டுகிறது என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலில் பலியான மக்கள் குறித்து இந்தியா கவலைக்கொள்வதில்லை என்றும், இதுவே இந்திய அரசின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என அவர் விமர்சித்தார்.
(Visited 1 times, 1 visits today)