ஐரோப்பா

உக்ரேன் ராணுவ பயிற்சி மையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 3 வீரர்கள் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை.

இதனால் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதின் மீது விரக்தியில் உள்ளார். ரஷியாவுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அந்த காலக்கெடுவுக்குள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில், கடுமையான தடைவிதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த போதிலும், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் ராணுவ பயிற்சி மைதானம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயம் அடைந்துள்ளனர்.

செர்னிவ் பிராந்தியத்தில் ஹோன்சரிவ்ஸ்கே அருகே உள்ள உக்ரைனின் 196ஆவது பயிற்சி மையத்தில் இரண்டு இஸ்கந்தர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம் என ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துளளது.

இதற்கிடையே 78 டிரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 8 ஜெட்-பவர்டு டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!