ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி நபர் மீது இனவெறி தாக்குதல்

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை இளைஞர்கள் சிலர் அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 33 வயது சவுரப் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டவர், கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட கை உட்பட பலத்த காயமடைந்தார் பின்னர் அது மீண்டும் இணைக்கப்பட்டது.

ஜூலை 19 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஆல்டோனா மெடோஸில் உள்ள சென்ட்ரல் ஸ்கொயர் ஷாப்பிங் சென்டரில் உள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து சவுரப் மருந்துகளை வாங்கியுள்ளார்.

அவர் தனது நண்பருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஐந்து இளைஞர்கள் அவரைச் சூழ்ந்தனர். பின்னர் மோசமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, “நான் என்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றபோது, கத்தி என் மணிக்கட்டில் துளைத்தது. இரண்டாவது தாக்குதல் என் கையை துளைத்தது. மூன்றாவது தாக்குதல் எலும்பை துளைத்தது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தக்கறை படிந்த மற்றும் வலியால் துடித்த சௌரப், அந்தப் பகுதியை விட்டு வெளியேறி உதவிக்கு அழைத்தார். அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் ஆரம்பத்தில் அவரது கையை துண்டிக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அவர்களால் அவரது கையை மீண்டும் இணைக்க முடிந்தது.

ஆஸ்திரேலிய ஊடகங்களின்படி, ஐந்து இளைஞர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!