ஐரோப்பா

பிரான்ஸ் மருத்துவமனையில் மோதல் – பரிதாபமாக உயிரிழந்த செவிலியர்

பிரான்ஸ் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனை ஒன்றில் இருவருக்கிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றில் செவிலியரே கொல்லப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை இரவு Reims பல்கலைக்கழக மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் மேலாளர் ஒருவருக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதன்போது செல்வியரை மேலாளர் கத்தி மூலம் தாக்கியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான செவிலியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

தாக்குதல் நடத்திய மேலாளர் முதலில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியிருந்த நிலையில் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!