ஆஸ்திரேலியா

வாழ்க்கைச் செலவீனங்களை குறைக்க இலவச போக்குவரத்து சேவையை வழங்கும் ஆஸ்திரேலிய நகரங்கள்

அதிகமாக இருக்கும் பொதுப் போக்குவரத்துச் சேவைக் கட்டணங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவ ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம் சென்ற அண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி முதல் உதவிக்கரம் நீட்டியது.

அதன்படி எல்லாப் பேருந்து, ரயில், ‘லைட் ரயில்’ எனப்படும் பேருந்து-ரயில் ஆகியவற்றின் பயணங்களுக்கு 50 காசு கட்டணம் செலுத்தினால் போதும்.

ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலவாகும் அத்திட்டம் முதலில் ஆறு மாதங்களுக்குச் சோதனையிடப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நிரந்தரமாக்கப்பட்டது.

திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ரயில் பயணங்கள் 19% அதிகரித்தன, பேருந்துப் பயணங்கள் 16% கூடின, பேருந்து-ரயில் பயணங்கள் 28% அதிகரித்தன, ஃபெரி படகுப் பயணங்கள் 43% அதிகரித்தன என்று பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வப் புள்ளி விவரங்களில் தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களும் இதுபோன்ற அணுகுமுறையைப் பின்பற்றி வருகின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் திகதியிலிருந்து 18 வயதுக்குக்கீழ் உள்ள பயணிகள் கட்டணமின்றி பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று விக்டோரியா மாநிலம் மே 18ஆம் திகதி அறிவித்தது.

ஆஸ்திரேலியத் தலைநகர் கேன்பெராவில் சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து நவம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் இலசமாகப் பேருந்து, பேருந்து-ரயில் சேவைகள் வழங்கப்பட்டன. இப்போது அந்நகரில் வெள்ளிக்கிழமைகளில் இலசவப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலம், தலைநகர் பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் பிப்ரவரி ஐந்தாம் திகதி வரை எட்டு வாரங்களுக்கு இலவசப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கியது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித