இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையை விட்டு தப்பியோட முயற்சிக்கும் அரசியல்வாதிகள் – புலனாய்வுப் பிரிவு தகவல்

இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அரசியல்வாதிகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் இவ்வாறு இரகசியமாக வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர் என புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனவே இந்த முயற்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினருக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்படாதவர்கள் வெளிநாடு செல்ல எவ்வித தடையும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டவர்கள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய நாட்களாக கடந்த அரசாங்கங்களின் முக்கியஸ்தர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!