லாரி விபத்தில் 9 மலேசிய துணை ராணுவ அதிகாரிகள் பலி

மலேசிய துணை ராணுவப் படையின் போக்குவரத்து லாரி வேறொரு லாரியுடன் மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக அவசர சேவைகள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்து பண்டிகையை பாதுகாத்து வடக்கு மலேசிய நகரமான ஈப்போவுக்கு அந்தப் படை திரும்பிக் கொண்டிருந்தபோது இது நடந்ததாக பேராக் அவசர சேவைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஒரு போலீஸ் லாரி சரளை ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதியதில், முன்பக்கத்தில் மூன்று பேரும், பின்னால் 15 பேரும் சிக்கிக் கொண்டனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவின் பெடரல் ரிசர்வ் பிரிவைச் சேர்ந்த எட்டு பேரும், அவர்களின் வாகனத்தின் ஓட்டுநரும் கொல்லப்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்தன. ஒன்பதாவது துணை ராணுவப் படை உறுப்பினர் பின்னர் காயங்களால் இறந்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
விபத்து தொடர்பாக 40 வயது லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.