இலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஐவர் பலி – பலர் படுகாயம்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
35க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரன்டிஎல்ல பகுதியில் பேருந்து பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 19 times, 1 visits today)