IPL Match 50 – ராஜஸ்தான் அணிக்கு 218 ஓட்டங்கள் இலக்கு

18வது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் – ரிக்கல்டன் களம் இறங்கினர்.
நிதானமாக விளையாடிய ரோகித் – ரிக்கல்டன் ஜோடி 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தது. அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக சூரியகுமார் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய பாண்ட்யா, சூரியகுமார் ஆகியோர் தலா 48 ரன்கள் அடித்தனர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் பராக், தீக்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
(Visited 1 times, 1 visits today)