செய்தி விளையாட்டு

IPL Match 42 – ராஜஸ்தான் அணிக்கு 206 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் 2025 சீசனின் 42ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆர்.சி.பி. அணி தனது சொந்த மைதானத்தில் தொடர்ந்து 4ஆவது முறையாக டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி விராட் கோலி, பில் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக, அதுநேரம் விக்கெட் இழக்காமல் விளையாடினர்.

விராட் கோலியுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி 12ஆவது ஓவரி 4ஆவது பந்தில் பவுண்டரி அடித்து 32 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

18ஆவது ஓவரில் 14 ரன்களும், 19ஆவது ஓவரில் 16 ரன்களும் ஆர்சிபி-க்கு கிடைக்க 4 விக்கடெ் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரை ஆர்ச்சர் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி