ரஷ்யாவிற்கு எதிராக திரும்புமா செச்சினியா : பதவிக்கு வரும் புதிய ஆட்சியாளரால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

செச்சினியாவின் ஆட்சியாளர், மரணமடையும் நிலையில் இருப்பதாக ரஷ்ய நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அந்நாடு ஒரு புதிய அடியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரம்ஜான் கதிரோவ் தனது மகன் ஆடம் (17) தனக்கு பிறகு பதியேற்பார் என அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது அவருக்கும் புடினுக்கும் இடையே விரிசலுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது புட்டினின் படையெடுப்பை ஆதரித்து அவருக்கு உதவியாக ஆயிரக்கணக்கான படைகளை அவர் அங்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது அவர் இறக்கும் தருவாயில் தனது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றியுள்ளார், அவர் இறக்கும்போதோ அல்லது உடல்நலப் பிரச்சினைகளால் இயலாமை அடையும்போதோ தனது குடும்பத்தினர் குறித்து அச்சமடைந்துள்ளார் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
48 வயதான அவர் தனது மகனுக்கு பல பதக்கங்களை வழங்கியுள்ளார், மேலும் டீனேஜரை தொடர்ச்சியான பதவிகளில் நியமித்து, அவரை பட்டத்து இளவரசராகவும், வாரிசாகவும் வளர்த்துள்ளார்.
கடந்த வாரம் அவரது 15 குழந்தைகளில் ஒருவரான ஆடம், செச்சென் உள்துறை அமைச்சகத்தின் “குழுவினராக” நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.