விளையாட்டு

தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் 183 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்தார்.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடந்த 15 ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸை தில்லி கேபிடல்ஸ் வீழ்த்தியுள்ளது. கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் தில்லி அணி வெற்றி பெற்றிருந்தது.

சென்னை சேப்பாக்கம் திடலில் சிஎஸ்கே கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை குறைக்கும் விதமாக கடந்த சில போட்டிகளில் சென்னை அணியின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

சேப்பாக்கம் திடலில் விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியடைந்தது ஒருபுறமிருக்க, அந்த இரண்டு தோல்விகளும் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் தோல்வி என்பதே சிஎஸ்கேவின் கோட்டை தகர்கிறதா என்ற கேள்விக்கு காரணமாக அமைகிறது.

ஐபிஎல் தொடரின் அறிமுக சீசனில் (2008) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தது. அதன் பின், இத்தனை ஆண்டுகளில் ஆர்சிபி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட சிஎஸ்கேவை வீழ்த்தியது கிடையாது. ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் கோட்டையாக திகழ்ந்த சேப்பாக்கத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அசத்தியது ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

பெங்களூருவுக்கு எதிரான தோல்வியிலிருந்து வெளிவராத சிஎஸ்கே ரசிகர்களுக்கு தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான தோல்வி மற்றுமொரு பேரதிர்ச்சியாக அமைந்தது. காரணம் கடந்த 15 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் தில்லி கேபிடல்ஸ் சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றதே கிடையாது. ஆனால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளாக தொடர்ந்த சிஎஸ்கேவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது தில்லி கேபிடல்ஸ்.

சேப்பாக்கம் திடலில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியபோதிலும், அதன் பின் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ளது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அந்த மூன்று தோல்விகளில் இரண்டு தோல்விகள் சேப்பாக்கம் திடலில் ஏற்பட்டது என்பதே ரசிகர்களின் மிகப் பெரிய கவலை.

வெறும் 4 போட்டிகள் மட்டுமே முடிந்திருப்பினும், ஹாட்ரிக் தோல்வியிலிருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. குறிப்பாக, தனது கோட்டையான சேப்பாக்கத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சேப்பாக்கத்தில் நடைபெறும் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற பொறுப்பும் சிஎஸ்கேவுக்கு இருக்கிறது.

இனிவரும் போட்டிகளில், குறிப்பாக சேப்பாக்கம் திடலில் நடைபெறும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி செயல்படப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

(Visited 30 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
Skip to content