பொழுதுபோக்கு

ஒரு வருடம் கூட சேர்ந்து வாழல… சுகன்யாவுக்கு நடந்த சோகம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகை சுகன்யா, பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பை தாண்டி நாட்டியத்தில் மிகுந்த கவனம் உடையவர்.

இவர் முதன்முதலாக புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார், முதல் படத்திற்கே பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமின்றி சுகன்யா டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார், சீரியலில் நடித்துள்ளார்.

இப்படி சினிமாவில் பல திறமைகளை வெளிக்காட்டிய சுகன்யா திருமண வாழ்க்கை நல்லதாக அமையவில்லை.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சுகன்யா தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “நானும் என் முன்னாள் கணவரும் ஒரு வருடம் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை.

என் அக்காவின் மகளை என் குழந்தை என்று கூறுகிறார்கள். நான் இது தொடர்பாக பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனால், தொடர்ந்து தவறாக எழுதி வந்தனர். இதன் காரணமாக, ஒரு சேனல் மீது புகார் கொடுத்தேன். சமீபத்தில் தான் அதன் கேஸ் முடிவுக்கு வந்தது” என்று தெரிவித்துள்ளார்.

 

(Visited 40 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!