இலங்கையில் அவதான மட்டத்தில் வெப்பநிலை – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினம் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மனித உடலால் உணரக்கூடிய அளவில் வெப்பநிலை உயரக்கூடும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)