இலங்கை

இலங்கை நீதிமன்ற கொலையில் தேடப்படும் பெண் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்: பண வெகுமதி அறிவிப்பு

பாதாள உலக மன்னன் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வாரம் கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் சுட்டுக்கொல்லப்பட்ட சஞ்சீவாவை கொலை செய்ய துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய பெண் நீர்கொழும்பு கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தகவல் தெரிவிப்பவர்களின் இரகசியத்தன்மையைப் பேணுவதன் மூலம் சந்தேகத்திற்கிடமான பெண்ணின் இருப்பிடம் குறித்த துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு பண வெகுமதி வழங்குவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தீர்மானித்துள்ளார்.

தேடப்படும் சந்தேக நபர் பற்றிய தகவல்களை அறியும் பொதுமக்கள் 071 – 8591727 / 071 – 8591735 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

(Visited 4 times, 4 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்