இலங்கை நீதிமன்ற கொலையில் தேடப்படும் பெண் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்: பண வெகுமதி அறிவிப்பு

பாதாள உலக மன்னன் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபரின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் கொழும்பு நீதிமன்ற வளாகத்தினுள் சுட்டுக்கொல்லப்பட்ட சஞ்சீவாவை கொலை செய்ய துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண்ணை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய பெண் நீர்கொழும்பு கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவல் தெரிவிப்பவர்களின் இரகசியத்தன்மையைப் பேணுவதன் மூலம் சந்தேகத்திற்கிடமான பெண்ணின் இருப்பிடம் குறித்த துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு பண வெகுமதி வழங்குவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தீர்மானித்துள்ளார்.
தேடப்படும் சந்தேக நபர் பற்றிய தகவல்களை அறியும் பொதுமக்கள் 071 – 8591727 / 071 – 8591735 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.