ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா- இரும்புத் தாது உரிமை கோரலில் 1.1 பில்லியன் இழப்பீடு கோரும் பழங்குடியினர் குழு

முறையான ஒப்பந்தம் இன்றி நிலத்திலிருந்து இரும்புத்தாதுவை எடுக்க ஃபோர்டெஸ்கியூ நிறுவனத்துக்கு மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, மாநில அரசிடமிருந்து ஆஸ்திரேலியப் பழங்குடியின அமைப்பு 1.1 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர் (S$1.5 பில்லியன்) இழப்பீடு கோரியுள்ளது.

இந்த விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் புதன்கிழமை (பிப்ரவரி 19) காட்டின.

சாலமன் சுரங்கத் தொழில் நடுவத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் தனது நிலமும் மக்களும் வெகுவாகப் பாதிப்படைந்திருப்பதாக யின்ஜிபார்ன்டி நுரா பழங்குடியினர் அமைப்பு கூறியது.

கலாசாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடும், பொருளியல் பாதிப்புக்கு $678 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.

யின்ஜிபார்ன்டி நுரா பழங்குடியினர் அமைப்பு தொடுத்துள்ள இந்த வழக்கு மற்ற அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற மற்ற அமைப்புகளும் இழப்பீடு கோரி வழக்கு தொடுக்கக்கூடும்.இந்த வழக்கு தொடர்பாக இவ்வாண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித