ஆசியா

தென் கொரியாவில் இடைநிறுத்தப்பட்டுள்ள டீப்சீக்கின் புதிய பதிவிறக்கங்கள் : தரவு பாதுகாப்பு நிறுவனம்

உலக அளவில் பேசுபொருளாகியுள்ள சீனாவின் DeepSeek AI-ஐ தடை செய்து தென்கொரியா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் Artificial Intelligence-ன் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் ChatGPT, Gemini AI போன்ற அமெரிக்க ஏஐ-கள் உலக அளவில் பெரும் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் அவற்றிற்கு போட்டியாக சமீபத்தில் சீன நிறுவனம் வெளியிட்ட DeepSeek AI பல்வேறு வசதிகளுடன் உலகம் முழுவதும் பல பயனர்களை ஈர்த்து வருகிறது.

பல நாடுகளில் அரசு துறைகளிலும் DeepSeek AI-ஐ பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான் தென்கொரிய அரசு டீப்சீக் ஏஐ செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கணினி உள்ளிட்ட சாதனங்களில் டீப்சீக்கை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்கும் தென்கொரியாவின் பாதுகாப்பு தகவல்களை டீப்சீக் மூலமாக சீனா திருடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலேயே டீப்சீக் தடை செய்யப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்