பொழுதுபோக்கு

விஷால் – அபிநயா காதல்? 15 வருட உறவு குறித்து அபிநயா ஓபன்

விஷால் நடிப்பில் வெளியான எந்தப் படமும் ஹிட் கொடுக்காத நிலையில் மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த சுந்தர் சியின் மத கஜ ராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தான தற்போது 47 வயதாகும் விஷால் இதுவரையில் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கும் அனிஷா அல்லா ரெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன் பிறகு 6 மாதங்கள் கழித்து அவர்களது திருமணம் ரத்தானது. இதைத் தொடர்ந்து விஷால் பல நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். இப்போது விஷாலும் நடிகை அபிநயாவும் காதலிப்பதாக தகவல் வெளியானது.

அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான டைம் டிராவல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு மனைவியாக அபிநயா நடித்திருந்தார். இதன் காரணமாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதால் தான் மார்க் ஆண்டனி படத்தில் அபிநயாவிற்கு வாய்ப்பும் கிடைத்ததாக சொல்லப்பட்டது.

காதல் வதந்தி குறித்து நடிகை அபிநயா தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைபருவ நண்பருடன் உறவில் இருப்பதாகவும், இருவரும் ஒருவரையொரு காதலித்து வருவதாக கூறிய அவர், இனிமேல் இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி விஷால் உடனான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால், 15 ஆண்டுகாலமாக உறவில் இருக்கும் அந்த காதலன்பற்றி அபிநயா எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் நடிகரா இல்லை வேறொருவரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். அபிநயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்